Jan 2 8:00 am - 11:30 pm விபத்தால் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசிங் என்பவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது.!
Jan 2 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகர் – 15வது வார்டுக்கு உட்பட்ட திரவியரத்தின நகரில் நியாய விலைக் கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. இசக்கி ராஜா, திரு. கண்ணன், வட்ட பிரதிநிதிகள் திரு. கணேசன், திரு. இளங்கோ உள்ளிட்டோர்.!
Jan 3 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஒருங்கிணைத்த தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழா – 2025 ல் கலந்து கொண்டு உரையாற்றியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். காமாட்சி, மாவட்ட வன அலுவலர் திரு. ரேவதி ரமன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு உள்ளிட்டோர்.!
Jan 3 8:00 am - 11:30 pm ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து வீரமுழக்கமிட்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி – கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது.!
Jan 5 8:00 am - 11:30 pm கழக துணைப் பொதுச்செயலாளர் – தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த போது.!
Jan 6 8:00 am - 11:30 pm மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம், POCSO வழக்குகளின் நிலை ஆகியவை குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!
Jan 7 8:00 am - 11:30 pm மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, VGS பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மேற்படிப்பு செல்லும் மாணவியரும் இந்த #புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.!
Jan 10 8:00 am - 11:30 pm தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.!