தூத்துக்குடி – திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் புதிய பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்வில் உடன் அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் ரமேஷ்பாபு, கார்த்திக், தொமுச நிர்வாகிகள் சந்திரசேகர், கருப்பசாமி, சுப்பிரமணியன், நாகராஜ், லிங்கசாமி, மனோகரவேல், செண்பகராஜ் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், போல் பேட்டை பகுதி பொருளாளர் உலகநாதன், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!