தூத்துக்குடியில் என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் – சங்கத்தின் பொதுச் செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றி சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் சுசி ரவீந்திரன், தூத்துக்குடி அனல் மின் நிலைய தொமுச செயலாளர் சக்திவேல், தொமுச சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சீனிவாசன், NTPL ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அமைப்புச் செயலாளர் அன்பழகன், தலைவர் முத்துராஜ், துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர் ஆறுமுகம், துணை பொருளாளர் அழகு பாண்டி, அலுவலக செயலாளர்கள் சங்கர், முருகப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.