தூத்துக்குடியில் 500 ஆட்டோ டிரைவர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகரில் உள்ள 500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் வழங்கும் விழா, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் புத்தாடைகளை வழங்கினார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.